search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஆஸ்பத்திரி"

    • வழக்கம் போல் காரில் பணிக்கு வந்தனர்
    • காருக்குள் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறியது

    நாகர்கோவில்:

    ஆசாரிப ள்ளம் அரசு மருத்துவ க்கல்லூரி ஆஸ்பத்திரியில் கணவன்- மனைவி 2 பேர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் இன்று காலை வழக்கம் போல் காரில் பணிக்கு வந்தனர். வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு செல்வதற்காக தயாரானார்கள்.

    அப்போது காரின் டிக்கியை திறந்த போது பாம்பு ஒன்று காருக்குள்ஓடியதை பார்த்து கணவன்- மனைவி இருவரும் அங்கி ருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும், வனத்து றைக்கும் தகவல் தெரிவி க்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்களும், வனத்துறையினரும்ஆசாரி ப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட டாக்டரின் காரை வனத்துறை ஊழியர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே ஓட்டி சென்றார். பின்னர் காரை வெளியே நிறுத்திவிட்டு தண்ணீரை காருக்குள் பீய்ச்சியடித்த போது பாம்பு ஒன்று காருக்குள் இருந்து சீறிப்பா ய்ந்து வெளி யேறியது. இதையடுத்த அந்த பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். பின்பு அதனை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். டாக்டர் தம்பதியினர் காருக்குள் பாம்பு புகுந்த சம்பவம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை போக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மகப்பேறு டாக்டர்கள் இல்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அரசு ஆஸ்பத்திரிகளும், கிராமப் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள் பணி புரியவில்லை.

    இதனால் பல இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. அரசு ஆஸ்பத்தி ரிக்கு தினமும் குறைந்தது 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளது. இது தவிர பல ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணி களுக்கு பிரசவம் பார்க்க போதிய அளவில் மகப்பேறு டாக்டர்கள் இல்லை.

    இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகள் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.

    எனவே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை போக்க வும், ேபாதிய அளவில் மகப்பேறு டாக்டர்களை நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன்.
    • டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோட்டயத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் பணியில் இருந்த வந்தனா தாஸ் என்ற பெண் டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் அவரை கத்திரி கோலால் குத்தி கொலை செய்தார்.

    இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெண் டாக்டர் ஒருவருக்கு நோயாளி கற்பழிப்பு மிரட்டல் விடுத்தார். இது பற்றி அந்த டாக்டர் காந்தி நகர் போலீசில் புகார் செய்தார். அதில், நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த நோயாளியை அழைத்து வந்தனர். அவரை நான் பரிசோதித்த போது, அந்த நோயாளி என்னை தகாத வார்த்தைகள் பேசினார். மேலும் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

    இதனால் நான் அதிர்ந்து போனேன். உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீண்டும் பிடித்து சென்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

    கேரளாவில் வந்தனாதாஸ் என்ற பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட பின்னர், டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    மேலும் ஆஸ்பத்திரி பாதுகாப்பு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வந்தது. அதன்பின்பும் ஒரு சில அரசு ஆஸ்பத்திரிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. இப்போது கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆஸ்பத்திரியின் பதிவேடுகள்படி மூன்று நாளில் மட்டும் 54 பேர் இறந்துள்ளனர்.
    • 15-ந் தேதி மட்டுமே 154 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    லக்னோ :

    உத்தரபிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையில், ஏறத்தாழ 400 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்

    இந்த நிலையில் 4 நாளில் மட்டுமே 57 நோயாளிகள், அதுவும் 60 வயது கடந்த முதியோர் அடுத்தடுத்து உயிரிழந்து இருப்பது, அங்கு பேசு பொருளாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சாவுகள், அங்கு வெப்ப அலைகள் நிலவுகிற நிலையில் நேரிட்டிருக்கின்றன. இதில் தலைமை மருத்துவ சூப்பிரண்டு டாக்டர் திவாகர் சிங், அசம்காருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    உயிரிழப்புகள் பற்றி முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் கூறும்போது, "ஆஸ்பத்திரியின் பதிவேடுகள்படி மூன்று நாளில் மட்டும் 54 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 40 சதவீதத்தினருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. 60 சதவீதத்தினர் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். 2 பேர் மட்டுமே வெப்ப அலை தாக்குதலால் இறந்துள்ளனர்" என தெரிவித்தார்.

    இதேபோன்று அந்த ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவ சூப்பிரண்டு (பொறுப்பு) டாக்டர் எஸ்.கே.யாதவ் கூறுகையில், " இந்த ஆஸ்பத்திரியில் தினமும் 125 முதல் 135 நோயாளிகள், உள்நோயாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். எனவே இந்த ஆஸ்பத்திரி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. 15-ந் தேதி மட்டுமே 154 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் வெவ்வேறு காரணங்களால் இறந்துள்ளனர். 16-ந் தேதி 20 பேர் இறந்திருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாளில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்" என்றார்.

    பிரச்சினைக்குரிய ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்வதற்காக லக்னோவில் இருந்து சுகாதாரத்துறை குழு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவர்கள் சோதனை நடத்திய பின்னர்தான் நிகழ்ந்துள்ள இறப்புகளுக்கான காரணத்தை உறுதியாகக்கூற முடியும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    இதற்கிடையே பல்லியா மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நோயாளிகள் சிரமப்படாத அளவில் ஏர் கூலர்கள் மற்றும் ஏ.சி. வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும், இது தவிர 15 படுக்கைகள் புதிதாக போடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் ரவீந்திர குமார் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறைக்கு பொறுப்பேற்றுள்ள துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் கூறியதாவது:-

    வெப்ப அலை தாக்குதல் பற்றி தெரியாமல், இறப்புகள் குறித்து தவறான குறிப்புகளை எழுதியதற்காகத்தான் தலைமை மருத்துவ சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளியையும் கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அனைத்து தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கும், தலைமை மருத்துவ சூப்பிரண்டுகளுக்கும் உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • ஆஸ்பத்திரியில் மனைவியை கணவனே வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி வி.கே.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் மணியன் (வயது40). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கற்பகபிரியா (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மணியன் கடந்த சில நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

    இந்நிலையில் கற்பகபிரியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை தனது மனைவியை பார்க்க வந்த மணியன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டினார். இதனால் கற்பகபிரியா உயிருக்கு பயந்து ஓடினார். இருந்தபோதும் அவரை துரத்தி சென்ற மணியன் கை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டினார். இதை பார்த்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மணியனை ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிடித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி அரசு ஆஸ்பத்திரியில் மனைவியை கணவனே வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சர்க்கரை வியாதி இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.
    • சிட்டி வழிமுறைகள், நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவ மனையில் நீரழிவு நோய்க்கான சிறப்பு வெளிப்புற சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

    இதை கவர்னர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, கண்காணிப்பாளர் செவ்வேள், துணை இயக்குனர் ரகுநாதன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், மக்கள் தொடர்பு அதிகாரி ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுவையில் பெருகிவரும் நீரழிவுநோயை கட்டுப்படுத்தவும், இருதயநோய், நரம்பியல் நோய்கள், பக்கவாதம், சிறுநீரக செயலிழிப்பு தடுக்கவும், நீரழிவு நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் இந்த சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    இதை தொடங்கி வைத்த பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    சர்க்கரை வியாதி இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. புதுவையில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வு கூறியுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறையை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு தனிப்பிரிவு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கென தனிப்பிரிவு தொடங்கப்படும். புதுவை சுகாதாரத்துறையை மேம்படுத்த தேவையான கருவிகள் வாங்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் தரையில் பாயில் படுப்பதாக ஒரு தகவல் வந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தேன்.

    அப்போது அதிகாரிகள், நாங்கள் யாரையும் படுக்கை இல்லை என திருப்பி அனுப்புவதில்லை. படுக்கை கொள்ளளவை விட அதிக நோயாளிகள் வருகின்றனர் என தெரிவித்தனர். வரும் நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். மக்கள் அதிக நேரம் காத்திருக்கக் கூடாது. தேவையான கருவிகள் வாங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

    தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். மாநில மாணவர்கள் உரிமைகள் பறிக்கப்படாது என்பதில் சந்தேகமில்லை. எந்த முறையில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது? என முழு விபரத்தை கேட்டுள்ளேன். நீட் அமுல்படுத்தப்பட்ட போதும் இடஒதுக்கீடு பறிபோகும் என குற்றம் சாட்டினர்.

    ஸ்மார்ட்சிட்டி திட்டம் வெளிப்படையாக நடக்கிறது. கடந்த ஆட்சியில் தாமதமாக நடந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பே பணிகள் முடிந்திருக்க வேண்டும். எங்களின் முயற்சியில் தற்போது அடுத்த ஆண்டு வரை ஸ்மார்ட் சிட்டி திட்ட காலத்தை நீட்டித்துள்ளோம்.

    இத்திட்டத்தில் எந்த குறைபாடும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி வழிமுறைகள், நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளோம். காலதாமதம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு விரைவாக பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. லஞ்சம், ஊழலை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நானே விசாரணைக்கு உத்தரவிடுவேன். தற்போது வரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் எந்த குறைபாடும் இன்றி நடந்து வருகிறது.

    அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு அனுமதி கிடைத்துவிடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    எதிர்கட்சித் தலைவர் சிவா மாணவர் சேர்க்கை ரத்துக்கு அரசு பொறுப் பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.

    தமிழ்நாட்டிலும்தான் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுவாக குற்றம்சாட்டாமல் மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.

    நோயாளிகளை பாயில் படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கு இடமில்லை என்றால், அரசு மருத்துவக் கல்லூரிக்கு நோயாளிகளை அனுப்பிவையுங்கள் என தெரிவித்துள்ளேன். அவசர பிரிவுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரகால சிகிச்சை பிரிவுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். அதிகளவு நோயாளிகள் தமிழ்நாட்டில் இருந்துதான் வருகின்றனர். வேறுபாடு பார்ப்பதில்லை. அவர்களுக்கும் பாகுபாடின்றி சிகிச்சை அளித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்-அமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
    • தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியில் கூடுதல்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

     தாராபுரம் :

    தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அப்போது அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியில் கூடுதல்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தரைத்தளத்தில் வரவேற்பறை, கதிரியக்க அறை சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் அறை ஆய்வகம் 2 எண்ணிக்கையிலும், அல்ட்ரா கதிர்வீச்சு அறை வெளிப்புற நோயாளிகளுக்கான இருதய சிகிச்சை அறை மற்றும் மருந்தக இருப்பு அறைகளும் கட்டப்படுகிறது.

    முதல் தளத்தில் டயாலிசிஸ் வார்டு, பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, தீவிர சிகிச்சை பிரிவு பதிவறை, மருந்து இருப்பு அறை, சாய்தளம் கழிவறை வசதிகள். 2-ம் தளத்தில் அறுவை அரங்கு 2-ல் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தும் அறை, பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, கழிவறை மற்றும் சாய்தள வதிகள்.3-ம் தளத்தில் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு) ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர்அறை, பணி செவிலியர் அறைகள்.

    4-ம் தளத்தில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு) பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர்அறை, பணி செவிலியர் அறை சாய்தளம் கழிவறை வசதிகள்.5-ம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, காப்பீடு திட்ட பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, சாய்தளம் கழிவறை வசதிகள். 6-ம் தளத்தில் கண் சிகிச்சை பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்) ரத்த வங்கி, கூட்ட அரங்கம், சாய்தளம் கழிவறை வசதிகளுடனும் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • டாய் எனப்படும் தமிழ்நாடு விபத்து, அவசர சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • அனைத்து வார்டுகளிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை தயாராக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் விபத்து உயிரிழப்புகளை தடுக்க சுகாதார துறை சார்பில், டாய் எனப்படும் தமிழ்நாடு விபத்து, அவசர சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக விபத்தில் சிக்கி வருவோருக்கு விரைந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் விபத்து உயிரிழப்புகள் குறைந்தன.அரசால் செயல்படுத்தப்படும் இது போன்ற திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்ற சிறப்புக்குழு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்வது வழக்கம்.

    இம்மாதம் உச்சநீதிமன்ற சிறப்புக்குழு தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில், செயல்படுத்தப்படும் டாய் திட்டம் குறித்து ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், டாய் வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்யவும், அங்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து வார்டுகளிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை தயாராக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • சுப்பிரமணியனை பரிசோதித்து அவரை நாகை அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்ப டாக்டர் ஜன்னத் அறிவுறுத்தினார்.
    • நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கீழையூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் ஜன்னத் (வயது 29). இவர் திருப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் இரவில் நள்ளிரவில் திருப்பூண்டி சிந்தாமணி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை நெஞ்சுவலி காரணமாக அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி புவனேஷ்ராம் (35) என்பவர் திருப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்.

    அப்போது சுப்பிரமணியனை பரிசோதித்து அவரை நாகை அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்ப டாக்டர் ஜன்னத் அறிவுறுத்தினார். இதனை கேட்ட புவனேஷ்ராம் மேல் சிகிச்சைக்கு அனுப்பாமல் இங்கேயே மருத்துவம் பார்க்க வேண்டும். பணியின்போது ஹிஜாப் எதற்கு அணிந்துள்ளீர்கள்? நீங்கள் டாக்டராக என்று சந்தேகம் உள்ளது. ஹிஜாப்பை கழற்றுங்கள் என கூறி ஜன்னதிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தார்.

    அதற்கு ஜன்னத், நள்ளிரவில் ஒரு பெண்ணிடம் வீணாக தகராறில் ஈடுபடாதீர்கள் என கூறியும் புவனேஷ்ராம் தொடர்ந்து ஹிஜாப் குறித்து பேசி தகராறில் ஈடுபட்டார். மேலும் இதனை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி, ம.ம.க, ம.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமையில் ஆஸ்பத்திரி அருகே வேளாங்கண்ணி - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பா.ஜ.க நிர்வாகி புவனேஷ்வராமை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

    இதையடுத்து நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கீழையூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று கட்சியினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பிணமாக கிடந்த அமலோற்பவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சொத்து பிரச்சினையில் தாய், தந்தையரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பெருங்கடை தெரு பகுதியை சேர்ந்தவர் பவுல். இவரது மனைவி அமலோற்பவம் (வயது 68). இவர்களுக்கு மோகன்தாஸ் (50) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது. மோகன்தாஸ் மனைவி குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் வசித்து வருகிறார்.

    பவுல், அமலோற்பவம் இருவரும் வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வந்தனர். தந்தை-மகனுக்கு இடையே சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மோகன்தாஸ் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். வீட்டின் கீழ் பகுதியில் தாய்-தந்தை வசித்து வந்த வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த பவுல், அமலோற்பவத்திடம் தனக்கு சொத்து தருமாறு கேட்டு தகராறு செய்தார்.

    அப்போது அவர்கள் மோகன்தாஸிற்கு சொத்து கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மோகன்தாஸ், தந்தை பவுல், தாய் அமலோற்பவம் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அமலோற்பவத்திற்கு கழுத்து, முதுகு பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பவுலுக்கு முதுகு, கழுத்து, தோள்பட்டை பகுதியில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த அமலோற்பவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாயாரை வெட்டி கொலை செய்த மோகன்தாஸ் பூதப்பாண்டி போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

    நான் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இது எனது தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரது சொத்துக்களை எனக்கு தர மறுத்தார். எனது சகோதரிகளுக்கு சொத்துக்களை கொடுத்தார். மேலும் சொத்துக்களை விற்று வந்த பணத்தையும் எனக்கு தரவில்லை.

    கடந்த 10-ந்தேதி சிறமடம் பகுதியில் 5 ஏக்கர் சொத்தை ரூ.30 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அதில் கிடைத்த ரூ.15 லட்சம் பணத்தை எனது சகோதரிகளுக்கு கொடுத்தார். எனக்கு பணம் தராதது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எனது தாய், தந்தையிடம் எனக்கும் சொத்தில் பங்கு தரவேண்டும். சொத்து விற்பனை செய்து வந்த பணத்தை எனக்கு தர வேண்டும் என்று கேட்டேன்.

    ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட தகராறில் அவர்களை அரிவாளால் வெட்டினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் தொடர்ந்து மோகன்தாசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சொத்து பிரச்சினையில் தாய், தந்தையரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குழந்தை சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • கடந்த 2 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகள் மற்றும் அதன் தாய்மார்கள் விவரம் சேகரிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையில் ஒரு ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்தது. இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் குழந்தை ஏதேனும் காணாமல் போய் உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகள் மற்றும் அதன் தாய்மார்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் எந்த குழந்தையும் மாயமாகவில்லை என உறுதி செய்யப்பட்டது.

    இந்தநிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் ஆராயப்பட்டது. அதில் நைட்டி அணிந்த ஒரு பெண் துண்டில் குழந்தையை சுற்றி உட்கார்ந்து இருந்தார். இரவு 11 மணி அளவில் அவர் கழிவறைக்கு சென்று 20 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த காட்சி பதிவாகி இருந்தது.

    ஆனால் அவருக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்க வில்லை. வெளியில் குழந்தை பெற்று அதனை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறையில் வீசி சென்றது உறுதியானது.

    அந்த புகைப்படத்தின் அடிப்படையில் குழந்தையை வீசி சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    மதுரை


    நாடு முழுவதும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20 படுக்கைகள் உடைய குரங்கு அம்மை பிரத்யேக சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

    இங்கு அனைத்து படுக்கைகளிலும் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு முதல் கட்டமாக சிகிச்சை தரும் வகையில் மருந்து-மாத்திரைகளும் தயார் நிலையில் உள்ளன. 

    குரங்கு அம்மை நோயாளிகளிடம் சளி, ரத்தமாதிரி எடுத்து புனே ஆய்வகத்திற்கு அனுப்பவும் தாயார் நிலையில் உள்ளதாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்னவேல் தெரிவித்து உள்ளார்.
    ×